திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், ராமகோபாலனின் 91 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, 40 பேர் கண்தான உறுதிமொழி அளித்துள்ளனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். பாளையங்கோட்டை காசிவிஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனையில் 40 பேர் கண்தான உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் வெட்டும் பெருமாள், பிரம்மநாயகம், வினோத், சிவா, வெற்றிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.