விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
விபத்தில் காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
விஜயநாராயணம் அருகேயுள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கரநயினார் மகன் மாணிக்கம் (23). இவர், விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல பாளையங்கோட்டையில் பழைய காவலர் குடியிருப்பு அருகே பேருந்தும்-வேனும் வெள்ளிக்கிழமை மோதிய விபத்தில் சவலாப்பேரியைச் சேர்ந்த தாமோதரன் (60), முருகன் (26), தனலட்சுமி (70), வேல்முருகன் (40), வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சங்கரம்மாள் (50) ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.