திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக பிப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக பிப்ரவரி 4-ஆவது வெள்ளிக்கிழமைக்கு (பிப். 23) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.