ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொங்கல் போனஸை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளை. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநில துணை அமைப்பாளர் ச. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம், மாநில துணை அமைப்பாளர்கள் இ. சந்திரசேகரன், எஸ்.என். முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பாஞ்சாலி உள்பட பலர் பங்கேற்றனர்.