சங்கர்நகர் பேரூராட்சி, சங்கர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் புகையில்லா போகி மற்றும் பொங்கலை கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் உ.கணேசன் தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். பேரூராட்சி செயல்அலுவலர் கே.வெங்கடேசன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் இரா.ராஜகணபதி, அபிதாபேகம், தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாணவர்-மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர். உதவித் தலைமையாசிரியர் ஆ.ரெங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் ரவிசங்கர் உள்பட பலர்கலந்துகொண்டனர்.