திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மொஹரம் பண்டிகை காரணமாக செப். 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 3-ஆவது வெள்ளிக்கிழமை நடைபெறும். ஆனால் இந்த மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாகும். அதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 4-ஆவது வெள்ளிக்கிழமை (செப்.28) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.