மோடி பிறந்த நாள்: நெல்லையில் ரத்த தானம்
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலியில் பாஜகவினர் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கினர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாஜக மருத்துவ அணி சார்பில், சிறப்பு ரத்த தான முகாம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் சேகர் கண்ணன் தலைமை வகித்தார். மருத்துவப் பிரிவு மாநிலத் தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ. தயாசங்கர் ரத்த தான முகாமை தொடங்கிவைத்தார். மாவட்டப் பொதுச் செயலர் டி.வி. சுரேஷ், மண்டல பொதுச் செயலர் கே.ஆர்.ஜி. பாலாஜி, மகளிரணி மாவட்டப் பொதுச் செயலர் மாரியம்மாள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முகாமில், 22 பேர் ரத்த தானம் அளித்தனர்.