தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின் மாநாடு

பாபநாசத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருநெல்வேலிலி மின் திட்ட மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது.

பாபநாசத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருநெல்வேலிலி மின் திட்ட மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது.
பாபநாசம் திருவுடையான் நினைவரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர்கள் குடும்ப விழாவுக்கு திட்டச் செயலர் எம்.பீர்முகம்மதுஷா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார். மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கேள்வி பதில், நாடகங்கள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலில் ஏ.ஐ.ஐ.இ.ஏ. அகில இந்திய செயலர் கிரிஜா, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் ஏ. மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர். ஒக்கி புயலில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்களுக்கு பொதுச்செயலர் எஸ்.ராஜேந்திரன் நினைவுப் பரிசுகள் வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் திட்ட துணைத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கொடியேற்றினார். திட்டத் தலைவர் எஸ்.பூலுடையார் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு பொருளாளர் எம். சந்திரசேகரன் அஞ்சலி செய்தி வாசித்தார். மாநில துணைத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார். திட்டச் செயலர் எம். பீர்முஹம்மதுஷா வேலை அறிக்கை வாசித்தார். 
திட்டப் பொருளாளர் டி. கந்தசாமி வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலர் ஆர்.மோகன், மாநிலச் செயலர் எஸ்.வண்ணமுத்து, திட்டச் செயலர் சி. கருப்பையா, போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் எஸ்.ஜோதிஉள்ளிட்டோர் பங்கேற்றனர். வரவேற்புக் குழு செயலர் பி.நாகையன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com