விவேகானந்தர் மன்றத்தின் 190ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பா. வளன்அரசு தலைமை வகித்தார். கிருபாகரன் இறைவணக்கம் பாடினார். மன்ற இணைச் செயலர் திருக்குறள் முருகன் வரவேற்றார். விவேகானந்தரின் முதல் சீடர் சரத் சந்திரர் என்ற தலைப்பில் கவிஞர் ராசகோபால் சொற்பொழிவாற்றினார். விவேகானந்தர் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி, சொ. முத்துசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முத்துக்குமார், முருகன், கோதைமாறன், நாகராஜன், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். வெள்ளைத்துரை நன்றி கூறினார்.