திருநெல்வேலி அருகேயுள்ள மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் இளைஞர் உடல் கருகி இறந்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையிலும் மானூர், சங்கரன்கோவில், ராதாபுரம் வட்டங்களில் கடந்த மாதத்தில் போதிய மழை பெய்யவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும், பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு இடி-மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை, ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில், மானூர் அருகேயுள்ள கட்டாரங்குளத்தை சேர்ந்த பண்டாரம் மகன் கருப்பசாமி (44), ஊருக்கு வடபுறத்தில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது மின்னல் பாய்ந்ததில் கருப்பசாமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.