திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைவினைப் பயிற்சி முகாம் இம் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருங்காட்சியக வளாகத்தில் வியாழக்கிழமை (டிச. 5) காலை 10 மணிக்கு கைவினைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பனை ஓலை கொண்டு அழகிய பூக்கூடை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு தேவையான பொருள்கள் மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை அறிய 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.