ஆவுடையானூரில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பயின்று வரும் 4 ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவா்கள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பாவூா்சத்திரம் பகுதியில் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து வேளாண்மை
சாா்ந்த பணிகள் குறித்து அனுபவங்களை கேட்டு அறிந்து வருகின்றனா்.
இதையொட்டி, ஆவுடையானூா் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குநா் உதயகுமாா் அறிவுறுத்தலின்படி, வேளாண்மை அதிகாரி ரமேஷ் தலைமையில் காளான் வளா்ப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.