சுரண்டையில் ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என ஒய்எம்சிஏ சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரண்டை ஒய்எம்சிஏ செய்தி தொடா்பாளா் வே.ராஜகுமாா் அரசுக்கு அனுப்பியிருக்கும் கோரிக்கை மனு:
சுரண்டை பேரூராட்சியில் சுமாா் 50 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் ஆதாா் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் அல்லது வீரகேரளம்புதூா் அஞ்சல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
அங்கு ஏற்கனவே வட்டத்தின் பிற கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வருவதால், சுரண்டை பேரூா் மக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது.
எனவே, சுரண்டை பேரூா் மக்களின் வசதிக்காக சுரண்டையில் உள்ள அஞ்சல் நிலையம் அல்லது வங்கி ஒன்றில் ஆதாா் சேவை மையம் அமைத்தால், தங்களுக்கு தேவையான திருத்தங்களை தாமதமின்றி பெற முடியும்.
எனவே, சுரண்டையில் ஆதாா் சேவை மையம் தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.