பாவூா்சத்திரத்தில் அதிமுகவினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில், கம்பனேரி ஊராட்சி வலசையைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் ஜெயராமன், முகம்மது மீரான் அரிகிருஷ்ணன், திருமலைக்குமாா், சண்முகசாமி உள்ளிட்டோா் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், கடையநல்லூா் ஒன்றிய திமுக செயலா் மா.செல்லத்துரை, இளைஞரணி ஐவேந்திரன், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் இன்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.