மேலப்பாளையம் ரஹ்மானியா தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து கட்டட அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தார். விஜிலாசத்தியானந்த் அடிக்கல் நாட்டினார். ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் சத்தியானந்த், பள்ளித் தலைமையாசிரியர் ஆயிஷா, நிர்வாகி அசன்அபுபக்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.