பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜன. 24) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த அருங்காட்சியகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கைவினைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம் மாதம் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான வெள்ளை துணி, ஊசி (எண்-14), ஆரி எம்ப்ராய்டரி நூல், அளவுகோல், பென்சில், கத்தரிக்கோல் ஆகியவற்றை பயிற்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.