திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 4) பெண்களுக்கான கைவினைப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இது குறித்து காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில், முன்பு நடைபெற்ற பெண்களுக்கான கைவினைப்பயிற்சி வகுப்புகள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10 மணிக்கு சனல், பாசி ஆகியவற்றைக்கொண்டு செயற்கை ஆபரணம் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பும் பெண்கள் செல்லிடப்பேசி எண்: 82208 97095, தொலைபேசி எண்: 0462 4561915 ஆகியவற்றின் மூலம் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.