திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கான தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கு தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு, 31-7-2019 அன்று 61 வயதிற்கு கீழ் இருப்பவராக இருத்தல்வேண்டும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களும், ஓய்வுபெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி 627012 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் இம் மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஏற்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.