மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று வார காலத்தில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வாயிலாகவோ அல்லது‌ w‌w‌w.‌m‌s‌u‌n‌i‌v.​a​c.‌i‌n  என்ற இணையதளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய படிவங்களை ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 
மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் மறுமதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாகப் பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் "ஏ' மூலம் வரும் 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 26. விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் விவரம் மாணவர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய இணையதளம் வாயிலாக உரிய கட்டணத்துடன் படிவம் "பி' மூலம் ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10 என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com