திருநெல்வேலி
சுந்தரனார் பல்கலை.யில் மனோ வாசகர் வட்ட நிகழ்ச்சி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனோ வாசகர் வட்ட நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனோ வாசகர் வட்ட நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நூலகர் அ.திருமகள் தலைமை வகித்தார். எஸ்.ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை மத்திய சித்தா மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ம.முருகேசன் பங்கேற்றார். பல்கலைக்கழக மருத்துவ அலுவலர் பி.அய்யனார், வணிகவியல் துறைத் தலைவர் பி.ரேவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில், நூலகத் துறைத் தலைவர் பி.பாலசுப்ரமணியன், உதவி நூலகர் கண்ணன், பேராசிரியர்கள் ஜோதி முருகன், சென்டுராய பெருமாள் உள்பட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் நேரு நன்றி கூறினார்.