சுற்றுச்சூழல் நல ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க கோரி பொது நல அமைப்பினர் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மா.பால் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.ஆர்.நடராஜன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மர்மமான முறையில் காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அ.பீட்டர், லோகசங்கர், முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அருணா தேவி நன்றி கூறினார்.