மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மூலைக்கரைப்பட்டி அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (60). மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், சனிக்கிழமை பிற்பகலில் அங்குள்ள குளத்தில் மாடுகளை குளிப்பாட்டினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினாராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.