கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் மக்தும் ஞானியார் தர்ஹாவில் மதநல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கடையநல்லூர் மக்தும் ஞானியார் தர்ஹா கந்தூரி விழாவின் 10ஆவது நாளான திங்கள்கிழமை பிறைக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மதநல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .
இதில் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், மேலாளர் வைரவநாதன், சுகாதார அலுவலர் நாராயணன், பொறியியல் பிரிவு கணேசன், சமூக ஆர்வலர் மைதின், அரசு ஒப்பந்ததாரர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.