சொக்கம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
சொக்கம்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர் சொக்கம்பட்டியைச் சேர்ந்த வசந்தம் முத்துப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வரும்போது தவறி கிணற்றில் விழுந்துவிட்டாராம்.
இதுகுறித்து அருகிலிருந்தோர்,சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கடையநல்லூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.