திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் பால் வியாபாரி வெட்டப்பட்ட வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் தேனீர்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சங்கர்(33). பால் வியாபாரியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (50) என்பவருக்கும் மாடு கட்டுவதில் தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து சீனிவாசன், அவரது மகன் நம்பிராஜன் (25), மற்றும் உறவினர்கள் கிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் ஆகிய நான்குபேர் சேர்ந்து வியாழக்கிழமை சங்கரை அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த சங்கரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் நான்குபேர் மீது வழக்குப் பதிந்து, சீனிவாசன் (50), அவரது மகன் நம்பிராஜன்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.