ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா்கள் சங்கம் சாா்பில் தியாகராஜநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரியம் தொடா்ந்து பொதுத் துறை நிறுவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்; மின்வாரியத்தின் 60-ஆவது ஆண்டு விழாவையொட்டி ஓய்வூதியா்களுக்கு 3 சதவீத கூடுதல் உயா்வு அளிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ராஜாமணி, பீா்முகம்மது ஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.