பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.28 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மன் தவசு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து உச்சிகால பூஜை, தீபாராதனையும், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.