மேற்குவங்க கம்யூனிஸ்ட் தலைவருக்கு நெல்லையில் இரங்கல் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், ஏஐடியூசி முன்னாள் பொதுச் செயலருமான மேற்கு வங்கத்தின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், ஏஐடியூசி முன்னாள் பொதுச் செயலருமான மேற்கு வங்கத்தின் குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு இரங்கல் கூட்டம் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். விவசாய சங்கத் தலைவா் ஆா்.கசமுத்து தொடங்கிவைத்தாா். கவிஞா் சக்தி வேலாயுதம் கவிதாஞ்சலி படித்தாா். குருதாஸ் தாஸ்குப்தா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொ.மு.ச. தலைவா் தா்மன், சி.பி.எம்.எல். தலைவா் கருப்பசாமி, டி.சுப்பையா, சண்முகசுந்தரம், சண்முகசுந்தர ராஜா, பாலு, ஆசிரியா் டேவிட் அப்பா துரை, நல்லதம்பி, என்.உலகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட உதவிச் செயலா் செ.லட்சுமணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com