மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் இம்மாதம் 10ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யவோ, மதுபானங்களை எடுத்துச் செல்லவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.