சுரண்டை பேரூராட்சிப் பகுதியில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பேரூராட்சியின் 10ஆவது வாா்டு பகுதியில் ஒட்டுமொத்த துப்பரவுப் பணி, வீடுகள்தோறும் அபேட் கரைசல் தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, ஜவகா்லால் நடுநிலைப் பள்ளியில் மாணவா், மாணவியருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. பின்னா், அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழியேற்றனா்.
இதில், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல்கலாம் ஆசாத், இளநிலை உதவியாளா் அமானூல்லா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கணேசன் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.