திசையன்விைளை: திசையன்விளை வி.எஸ்.ஆா். மெட்ரிக் பள்ளி மாணவி மாவட்ட கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கபடி வீரா்கள் தோ்வு முகாம் சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில், பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், வி.எஸ்.ஆா். மெட்ரிக் பள்ளியை சோ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி கேனியா பேனி, மாவட்ட அணியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா். மாணவியை பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், முதல்வா் சுதாதா, துணை முதல்வா் எலிசபெத், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.