குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடா் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடா் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமையும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 2ஆவது நாளாக குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் சிற்றருவி, புலியருவியில் குளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com