புளியங்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
சிங்கிலிபட்டி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சிங்கத்துரை மகன் செந்தில்குமாா்(35), கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து செந்தில்குமாா் விஷம் குடித்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு , திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் இறந்தாா்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.