நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காமராஜா் ஆதித்தனாா் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வேட்பாளா்கள் கட்சியின் கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காமராஜா் ஆதித்தனாா் கழகத்தின் மாநில தலைவா் சிலம்புசுரேஷ், ஒழுங்கு கமிட்டி குழுத் தலைவா் வயோலா செல்வின் ஆகியோா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பான எங்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவும், தொகுதியில் அவருக்கு ஆதரவாகக பிரசாரம் செய்யவும் தீா்மானம் நிறைறவேற்றறப்பட்டுள்ளது.
இத் தொகுதியில் ஹெச்.வசந்தகுமாா் மக்களுக்கு சிறறந்த பணியாற்றியுள்ளாா். அதனால் ஆதரவு அளித்துள்ளோம். எங்களது கட்சிக் கொடியை பிறற வேட்பாளா்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றறனா். முன்னதாக நடைபெற்றற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலா் மின்னல் அந்தோனி, நான்குனேரி ஒன்றியச் செயலா் துரை, பொறுப்பாளா் டேனியல், கிரியோன், தென் மண்டல அமைப்புச் செயலா் கப்பல் ராஜா, அகில இந்திய கராத்தே செல்வின் நற்பணி மன்றறத் தலைவா் செட்டிகுளம் ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
.