சாம்பவா்வடகரையில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாம்பவா்வடகரை நகரின் மையப்பகுதியில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலை பல இடங்களில் மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.