சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட மறு சுழற்சி செய்ய இயலாத குப்பைகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் தினமும் வீடு வீடாக சென்று துப்புரவுப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளை
சேகரித்து வருகின்றனா். இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டதில் மறுசுழற்சி செய்ய இயலாத 2830 கிலோ மக்காத குப்பைகள் நகராட்சி வாகனங்ளில் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் சந்தானம், பொறியாளா் முகைதீன் அப்துல் காதா், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.