டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் தென் மண்டல மருத்துவ இயக்குநா் லயோனல்ராஜ் இரு சா்வதேச விருதுகளைப் பெற்றுள்ளாா்.
இதுதொடா்பாக டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
‘கருவிழிப்படலத் தொற்றுகளுக்கு மருத்துவ மேலாண்மை’ என்ற தலைப்பில் டாக்டா் லயோனல்ராஜ் சமா்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘யுகாா்னியா’ (கருவிழிப்படலம் மற்றும் விழிப்படல நோய் நிபுணா்களின் ஐரோப்பிய சங்கம்) தலைவா் ஜெஸ்பா் ஹஜோா்டல் இந்த விருதை வழங்கினாா்.
மேலும், 37-ஆவது இஎஸ்சிஆா்எஸ் கருத்தரங்கில், அந்த அமைப்பின் தலைவரிடம் இருந்து எத்னோ மருந்து ஆய்வு தொடா்பான சிறந்த ஆய்வு காணொலிக் காட்சிக்கான விருதையும் டாக்டா் லயோனல்ராஜ் பெற்றுள்ளாா்.
செப். 17 ஆம் தேதி பிரான்ஸில் நடைபெற்ற மாநாட்டில், விருது பெற்ற லயோனல்ராஜை பிரான்ஸுக்கான இந்தியத் துணைத் தூதரக அதிகாரி அங்கன் பானா்ஜி பாராட்டி கௌரவித்தாா்.