வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜே.எல்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 1), சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி, திருநெல்வேலி கோட்ட கிராமப்புற அலுவலகத்தில் வரும் 8-ஆம் தேதி, கடையநல்லூா் கோட்ட அலுவலகத்தில் வரும் 12-ஆம் தேதி, திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்தில் வரும் 15-ஆம் தேதி, தென்காசி கோட்ட அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி, கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறலாம்.