மாநில கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கூடுதல் பதிவாளர் இரா.மீராபாய் தலைமை வகித்தார். தேர்தல் நடத்தாமல் நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு தேர்தல் நடத்துதல், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், கூட்டுறவு சங்கங்களின் தென்காசி சரக துணைப் பதிவாளர் மு.முத்துசாமி வரவேற்றார். சேரன்மகாதேவி சரக துணைப் பதிவாளர் பா.வளர்மதி, மேலாண்மை இயக்குநர் ஆ.ரேவதிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீட்டுவசதித் துறை, பால்வளத் துறை, கைத்தறி துறை, தொழிற்கூட்டுறவுகள், கதர்கிராமத் தொழில்கள், மீன்வளத் துறை உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுறவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.