மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர் தலைவர்கள் ஆலோசனைக்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகரச் செயலர் டி.ஹரிவிஷ்ணு வரவேற்றார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சி.விக்னேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாநகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்; அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஜனநாயகத்தின் ஆணிவேரான மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்; மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்; மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்; விடுதலைப் போராட்ட வீரர்கள், தேசிய தலைவர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்தில் நடத்த வேண்டும்; அரசுப் பள்ளிகளின் தரத்தை உயரத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்; தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com