திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி பள்ளியில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், திருநெல்வேலி சிலம்பாட்டக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஜூனியர், சீனியர் மாணவர்- மாணவிகளுக்கான சிலம்பாட்டப் போட்டிகள் திருநெல்வேலி மதிதா இந்துக்கல்லூரி பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதிமுக மாநகர் மாவட் அதிமுக செயலர் தச்சை கணேச ராஜா போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச்செயலர் சுதா கே.பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், திருநெல்வேலி சிலம்பாட்டக் கழக செயலர் சிலம்பு சுந்தர், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.