சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் நின்று சுரண்டை பேரூராட்சி பகுதி, திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாகுறிச்சி ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அவருடன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.