ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர் .
ஆலங்குளம் அருகே புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் முருகன். விவசாயியான இவருக்குச் சொந்தமான பசு மாடுகளை வெள்ளிக்கிழமை, மேய்ச்சலுக்காக தோட்டத்துக்கு ஓட்டி சென்றுள்ளார்.
தோட்டத்தில் கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அங்கு வந்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் மீட்டனர்.