பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு

பாளை. மாநில தமிழ்ச் சங்கத்தில் விசுவநாதம் நூல்கள் குறித்த தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. 

பாளை. மாநில தமிழ்ச் சங்கத்தில் விசுவநாதம் நூல்கள் குறித்த தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு உலகத்திருக்குறள் தகவல் மையத் தலைவர் பா.வளன் அரசு தலைமை வகித்தார். பிரபா இறைவேண்டல் பாடினார். விவேகானந்தர் மன்றச் செயலர் பி.சுந்தரம் வரவேற்றார். "மருந்துகள்' என்ற நூல் குறித்து செ.பிரம சக்தி, "வள்ளலாரும் அருட்பாவும்' என்ற நூல் குறித்து தி.முகுந்தன் ஆகியோர் பேசினர். "கெடுநீரார் காமக்கலன்' என்ற திருக்குறள் தொடருக்கு கோதைமாறன் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில், வி.பாப்பையா, மகாலிங்கம், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். ரா.முருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com