தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து, புளியங்குடியில் மமக வினர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனர்.
வேட்பாளரை ஆதரித்து வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூரில்...
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் வள்ளியூர் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
அவருடன், திமுக நகரச் செயலர் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், காங்கிரஸ் நகரத் தலைவர் சீராக் இசக்கியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் சேதுராமலிங்கம், நகரச் செயலர் வேம்பு சுப்பையா, சுரேஷ், நம்பி, அன்பரசு, மதிமுக சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதிகளிலும் வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.