செங்கோட்டையில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் பலியானார்.
செங்கோட்டை காலசாமி தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (38). கூலித் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுக்காக கட்டிலில் மின்விசிறியை வைத்து தூங்கியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.