நெல்லை, சுரண்டை, கல்லிடைக்குறிச்சியில் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள்

திருநெல்வேலி, பங்களாசுரண்டை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன. 

திருநெல்வேலி, பங்களாசுரண்டை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன. 
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆ.ஜெயசித்ரா அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அளவில் உலகத் திறனாய்வுத் திட்ட கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன. 
6, 7, 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்-மாணவிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். வெள்ளிக்கிழமை (ஏப். 26) தொடங்கி இம்முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருநெல்வேலி கல்வி மாவட்டத்துக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திலும், தென்காசி கல்வி மாவட்டத்துக்கு பங்களாசுரண்டையில் உள்ள பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்துக்கு கல்லிடைக்குறிச்சி மினி விளையாட்டரங்கிலும் பயிற்சி நடைபெறுகிறது.
வேகம், உடல் உறுதி உள்ளிட்ட அடிப்படை விளையாட்டுத் திறனை மேம்படுத்த அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், மாலை 6.30 மணிமுதல் இம்முகாமில் அளிக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com