பாளை. கல்லூரியில்மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 04th August 2019 04:01 AM | Last Updated : 04th August 2019 04:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மரிய சகாய அந்தோணி, ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி ஆகியோர் இணைந்து தொடங்கிவைத்தனர். முகாமில், இந்தியாவில் உள்ள 81 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தேர்வு செய்தன. 4,315 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில், 1,003 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில், தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில்மையம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.