காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராமசுப்பு விடுத்துள்ள அறிக்கை: பாப்பான்குளத்தில் எனது தலைமையில் ராஜீவ்காந்தியின் சிலை நிறுவப்பட்டது. 2014இல் இந்த சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. அதே வருடத்தில் மீண்டும் சிலையை நிறுவினோம். தற்போதும் சிலை உடைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்களால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. சிலையை உடைத்தவர்களை போலீஸார் விரைவில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.