தென்காசி மேலமுத்தாரம்மன் திருக்கோயில் ஆடி முளைப்பாரி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முளைப்பாரி தரிசனமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன. இரவில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை 8 மணிக்கு குற்றால தீர்த்தம் பவனி வருதல், பிற்பகலில் சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலையில் அம்பாள் புறப்பாடு வீதி உலாவும் நடைபெற்றன.
தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலமும், இரவில் அம்பாள் தீர்த்தவாரியும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர்.