மேலமுத்தாரம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

தென்காசி மேலமுத்தாரம்மன் திருக்கோயில் ஆடி முளைப்பாரி விழா புதன்கிழமை  நடைபெற்றது. 

தென்காசி மேலமுத்தாரம்மன் திருக்கோயில் ஆடி முளைப்பாரி விழா புதன்கிழமை  நடைபெற்றது.
இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முளைப்பாரி தரிசனமும்,  தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,  தீபாராதனை நடைபெற்றது.
மாலையில்  பொங்கலிடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன.  இரவில்  அலங்கார தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை 8 மணிக்கு குற்றால தீர்த்தம் பவனி வருதல், பிற்பகலில் சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலையில் அம்பாள் புறப்பாடு வீதி உலாவும் நடைபெற்றன.
தொடர்ந்து,  முளைப்பாரி ஊர்வலமும், இரவில் அம்பாள் தீர்த்தவாரியும்,  சிறப்பு அன்னதானமும் நடைபெற்றன.  ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com